இன்றும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு தாங்கள் அங்கீகாரம் வழங்குவதாக தெரிவித்தார்.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேர மின்வெட்டையும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிட மின் தடையையும் சந்திக்கும்.