சுமார் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை ஏற்றிச் செல்லும் ‘Schiff 5’ என்ற அதி சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பல் உலகின் மிக ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 945 என்றும், 2534 பயணிகளுக்கான வசதிகளை இது வழங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் இருந்து நாளை இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 2030 ஆகும்.
இது தொடர்பில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் வரும் இந்தக் கப்பலின் அளவு காரணமாக கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நிறுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
“Mein Schiff 5”maiden call to Sri Lanka .Expected toberth at 0600 hours on 29th November at East container terminal as the size of the ship is too big to berth at passenger terminal.
2030passengers and 945 crew will be on board with majority of passengers being Europeans. pic.twitter.com/Z5XSoKjb6Y— Harin Fernando (@fernandoharin) November 24, 2022