follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉலகம்அகதிகள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கத் தடை

அகதிகள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கத் தடை

Published on

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகின்ற நிலையில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

தலிபான்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதால் பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை தொடர்ந்து ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில் ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார்.

இதிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த 2 நாடுகளிலும் நடந்து வரும் போராட்டங்களால் அங்கு வசித்து வரும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

ஈரான் மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் போராட்டங்கள் அந்நாட்டு பிரச்சினை. இதனால் ஆப்கானிஸ்தானியர் யாரும் இதில் பங்கேற்க கூடாது என்று தலிபான் பிரதி அமைச்சர் அப்துல் ரஹ்மான் ரசித் தெரிவித்து உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் பலி

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு பக்கம் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது லெபனான் நாட்டில் உள்ள ஈரான்...

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்த இந்திய பிரதமர்

குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து...

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...