follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுராஜகிரிய சிறுநீரக கடத்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ராஜகிரிய சிறுநீரக கடத்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Published on

ராஜகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடம்பெறும் சிறுநீரக கடத்தல் தொடர்பாக நேற்றைய தினம் (24) 5 பேர் பொரளை பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட நால்வர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அவர்கள் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிப்பவர்கள். அவர்கள் இருபத்தி ஆறு முதல் நாற்பத்திரண்டு வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதற்காக இந்தக் குழுவினர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகரை விசாரணை செய்வதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூன்று முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த அதிகாரி, இந்த சிறுநீரக கடத்தலில் தொடர்புடைய மருத்துவமனை உரிமையாளர்களின் வாகனங்களில் சென்று தலா இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து முறைப்பாட்டாளர்களை மிரட்டி கடிதங்களில் கையெழுத்து வாங்கியது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...