follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுமேலும் 5 பேர் அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்தனர்

மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்தனர்

Published on

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், இன்று அதிகாலை தமிழகத்தின் தனுஸ்கோடி கடற்பகுதியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டுள்ள இலங்கை பொருளாதார அகதிகளின் மொத்த எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களை தவிர, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் வயது மூப்பு காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் தமிழக கடல் பகுதியை சென்றடைந்த இலங்கையின் அகதிகளை, மண்டபத்தில் உள்ள காவல்துறையினர், காலை 8 மணியளவில் கரைக்கு அழைத்து வந்தனர்.

நேற்று இவர்கள் மன்னாரில் இருந்து படகின் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வேலையின்மை உச்சத்தில் இருப்பதாக இந்த ஐந்து பேரைக்கொண்ட குடும்பத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...