ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) நாடாளுமன்றத்தில் பதிலளித்திருந்தார்.
ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கு மூன்று அச்சங்கள் இருக்க முடியாது என்று நான் சொல்கிறேன். மூன்று அச்சங்கள் உருவானது கண்டியில். அதுவும் மக்களுக்கு ஏற்பட்ட மும்முனை பயம். நோய் பயம், மனிதாபிமானமற்ற பயம், மரண பயம். இவை மக்கள் கூட்டத்திற்கு உண்டாவது.
ரதன சூத்திரத்தைக் கேட்கச் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போதும் மூன்று அச்சங்கள் இருப்பதில்லை. மரிக்காருக்கு பயம் இருந்தாலும், ஹிருணிகாவுக்கு பயம் இருந்தாலும், ரோசிக்கு பயம் இருந்தாலும் அது மும்முனை அச்சங்கள் இல்லை.”