follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP1ஹிட்லர்களுக்கு இலங்கையில் வாய்ப்பு இல்லை

ஹிட்லர்களுக்கு இலங்கையில் வாய்ப்பு இல்லை

Published on

இலங்கை போன்ற நாட்டில் ஹிட்லர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இராணுவத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் கைகளில் துப்பாக்கிகளை வழங்கி பட்டினியால் வாடும் மக்களின் தலைகளுக்கு வைக்குமாறு கூறுவது நியாயமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்தும் அவரது உரையில் தேரிவிக்கையில்;

“.. ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பயங்கரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கினால் அவசரநிலை பிரகடனப்படுத்தி இராணுவத்தை பயன்படுத்தி ஒடுக்குவோம் என்றார்கள். இது இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயலாகும். அத்தகைய அறிக்கையை வெளியிடக்கூடாது என நாங்கள் கருதுகிறோம். மக்கள் வந்தாலே ஹிட்லர்களுக்கு இலங்கை போன்ற நாட்டில் வாய்ப்பு கிடைக்காது. மக்களுக்கு இருந்த பிரச்சினைகள் காரணமாகவே கோட்டாபய வெளியேற்றப்பட்டார்.

எமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாக விளங்குகிறது. இவை அனைத்தும் மொட்டின் கொள்கைகள் தான். இது தான் ஏகாதிபத்திய ஹிட்லர் கொள்கை இவை அனைத்தும் மொட்டுக்குத்தான் சொந்தமானது. எனக்குத் தெரியாது ‘கபுடா ஹிட் த பஜட்’ ஆக இருக்குமோ தெரியவில்லை. இதனுள் இவைகளும் இருக்குமோ எனத் தெரியவில்லை. ஆதனால் இதனை விசேடமாக நினைவு கூற வேண்டும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேர்வின் சில்வா ஏப்ரல் 21 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான்...

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க

கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில் – விசாரணைகளை துரிதப்படுத்த திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர்...