இன்றைய தினமும் (24) சுழற்சி முறையின் கீழ் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பகலில் ஒரு மணி நேரமும் இரவில் மற்றொரு மணி நேரமும் என இரண்டு தனித்தனி நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W பிரிவுகளில் இன்று இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.