follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுவெலே சுதாவுக்கு எதிரான வழக்கின் முன்விளக்க மாநாட்டுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது

வெலே சுதாவுக்கு எதிரான வழக்கின் முன்விளக்க மாநாட்டுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது

Published on

சட்ட விரோதமாக ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஒன்றினை உடன் வைத்திருந்தமை தொடர்பில், பிரபல போதைப் பொருள்  வர்த்தகர்  என அறியப்படும்  கம்பொல விதானகே சமந்த குமார எனும் வெலே சுதாவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின் முன் விளக்க மாநாட்டுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி குறித்த வழக்கின் முன் விளக்க மாநாடு இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று ( 23) அறிவித்தார்.

அதன்படி குறித்த தினம் விசாரணை அதிகாரியான பொரலஸ்கமுவ பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் மன்றில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் பொரளை பகுதியில் குறித்த ஆயுதங்களை உடன் வைத்திருந்தமை தொடர்பில், மற்றொரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...