நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்று வடமேற்கு அல்லது தென்மேற்கு திசையில் வீசும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு 20-40 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும் கொழும்பில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.