follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுவிசேட தேவையுடைய சிறார்களுக்கு தடுப்பூசி நாளை ஆரம்பம்

விசேட தேவையுடைய சிறார்களுக்கு தடுப்பூசி நாளை ஆரம்பம்

Published on

12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு நாளை முதல் பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான விசேட செயலணியின் தீர்மானத்துக்கு அமைய இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நாடளாவிய ரீதியில் விசேட தேவையுடைய மற்றும் நிரந்தர நோயாளிகளான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...