follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை - சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published on

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் சுயேச்சையாக செயற்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று (14) ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.

தனக்கு மேலதிகமாக அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பியங்கர ஜயரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தான் வெளிநாட்டில் இருப்பதால் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தான் எந்தவொரு கூட்டமைப்பிலும் இணைந்துகொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் தாங்களும் கூட்டணியில் இணையவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்ய அனுமதி

மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் ட்ரைசைகிள்கள் (முச்சக்கர வண்டிகள்) பதிவு செய்வதற்கு விதிமுறைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சார முச்சக்கர...

ஏப்ரல் 21 தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கையை ஆராய நால்வரடங்கிய குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை...