follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுமாணவர் வருகை 80 சதவீதமாக வீழ்ச்சி!

மாணவர் வருகை 80 சதவீதமாக வீழ்ச்சி!

Published on

மாணவர்களின் பாடசாலை வருகை 95 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் உள்ள சுமார் 400 ஆசிரியர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமிருந்தும் கல்வி அமைச்சிடம் இருந்தும் பெறப்பட்ட தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மாகாணங்களில் வாரநாட்களில் திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை மாணவர்களின் வருகை வெகுவாக வீழ்ச்சியை பதிவு செய்கிறது.

குறிப்பாக வட மாகாணத்தில் திங்கட்கிழமை 81 சதவீதமாக பதிவாகும் மாணவர் வருகை, வெள்ளிக்கிழமை 76 சதவீதமாக குறைவடைகிறது.

தென் மாகாணத்தில் திங்கட்கிழமை 86 சதவீதமாக பதிவாகும் மாணவர் வருகை, வெள்ளிக்கிழமை 79 சதவீதமாக வீழ்ச்சியடைகிறது.

இவ்வாறு 10 முதல் 15 சதவீதமாக மாணவர்களின் வருகை குறைவடைதல் அல்லது கற்றல் செயற்பாடுகளை கைவிடுதல் போன்ற நடவடிக்கைகள் மிகவும் மோசமான நிலைமையாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்...

பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் எழுத்து மூலம் விடுத்துள்ள அறிவிப்பு

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர்...