follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுநாட்டிற்கு மேலுமொரு தொகை ஸ்புட்னிக்-V தடுப்பூசிகள் : கண்டி மாவட்ட மக்களுக்கு செலுத்த நடவடிக்கை

நாட்டிற்கு மேலுமொரு தொகை ஸ்புட்னிக்-V தடுப்பூசிகள் : கண்டி மாவட்ட மக்களுக்கு செலுத்த நடவடிக்கை

Published on

இலங்கைக்கு மேலும் 120,000 ஸ்புட்னிக்V தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த தடுப்பூசிகள் இன்று  அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், இவை இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த ஸ்புட்னிக்V தடுப்பூசி தொகையை கண்டி மாவட்ட மக்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் நாளை(20) மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் 150,000 பேருக்கு ஸ்புட்னிக்V தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 30,000 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...