follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுமே 9 வன்முறை – இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய...

மே 9 வன்முறை – இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய அனுமதி

Published on

மே 9 வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து 23 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது குறித்த பொது பாதுகாப்பு செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி  தெரிவித்ததாவது, வன்முறைகள் இடம்பெறுவதைத் தடுப்பதில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கடமை தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கான  நேர்காணல்கள் முடிவடைந்தன, மேலும் 2022 அக்டோபர் 10 ஆம் திகதிக்குப் பிறகு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு செயலாளர் மேலும தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...