follow the truth

follow the truth

October, 17, 2024
Homeஉள்நாடுஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சாத்தியம்

இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சாத்தியம்

Published on

இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 1465 பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதாகவும், பட்டியல் அண்மையில் 708 பொருட்களாக தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களின் கோரிக்கைகளை கருத்திற்க் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடு பட்டியலில் இருந்து பல பொருட்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  (R)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் – மாற்று விரலில் மைப் பூச தீர்மானம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...

மத்திய அதிவேக வீதியின் மீரிகம – கடவத்தை பகுதியை நிர்மாணிப்பது குறித்து விசேட கவனம்

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என...

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் முறைப்பாடு செய்ய புதிய திட்டம்

‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. ‘தலைவரிடம் சொல்லுங்கள்’...