follow the truth

follow the truth

April, 13, 2025
HomeUncategorizedமதுபானம், சிகரெட்டுகளை இணையத்தில் விளம்பரப்படுத்தியவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

மதுபானம், சிகரெட்டுகளை இணையத்தில் விளம்பரப்படுத்தியவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

Published on

இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில், மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை இணையத்தில் விளம்பரப்படுத்திய 169 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கலால் திணைக்களத்தின் சைபர் கிரைம் பிரிவு விசாரணைகளுக்கு உதவி வழங்கியுள்ளது.

அரசாங்கம் பெருமளவில் மதுபானம் மற்றும் புகையிலை ஆகிய இரண்டின் வரிப்பணத்தில் தங்கியிருப்பதாக பலர் கூறுகின்ற போதிலும், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை தடுப்பதே இந்த கைதுகளின் இலக்கு என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் சிகரெட் மற்றும் மதுபான பாவனையை தடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளதாகவும், “இதுபோன்ற நேரடி அல்லது மறைமுக ஒன்லைன் விளம்பரதாரர்கள் அல்லது தளங்களைப் பற்றி தெரிவிக்க புதிய மொபைல் போன் செயலியான VNATA ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

வரி நிபுணர்களின் கூற்றுப்படி, முந்தைய நிர்வாகங்கள் அத்தகைய அமைப்புகளை வைப்பது பற்றி பேசினாலும், அவர்கள் உண்மையில் அவ்வாறு செய்யவில்லை, ஏனெனில் மது மற்றும் புகையிலை பொருட்கள் அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை உருவாக்குகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...

முதல் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை...