follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுSLPP தலைவராக மஹிந்த!

SLPP தலைவராக மஹிந்த!

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று விதிகளை மீறிய காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜீ.எல்.பீரிஸை அந்த பதவியில் இருந்து நீக்கிய பின்னர் அந்த தலைவர் பதவிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் , அதன் கீழ் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால், அதனை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மறுசீரமைத்து வருவதுடன், மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...