follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுபிரித்தானிய ஊடகவியலாளரை இலங்கை செல்ல தடை விதித்த இந்தியா

பிரித்தானிய ஊடகவியலாளரை இலங்கை செல்ல தடை விதித்த இந்தியா

Published on

பிரித்தானிய கார்டியன் ஊடகவியலாளர் ஆகாஷ் ஹசன் இலங்கை செல்ல இந்தியா தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 196 இல் பயணிக்க ஆகாஷ் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆகாஷ் ஹசன் டுவிட்டர் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.

சுமார் ஐந்து மணி நேரம் ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாமல், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தான் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், தனது போர்டிங் பாஸை மறுத்ததன் பின்னர் விமான டிக்கட் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் இலங்கை செல்வதனை தடை செய்தமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் , தனது விஜயத்தின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து இரண்டு அதிகாரிகள் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து...

வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...