follow the truth

follow the truth

October, 30, 2024
Homeஉள்நாடுவிமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது

Published on

விமானம் ஊடாக டுபாய் நோக்கிப் பயணிக்க தயாராக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டனிஸ் அலி என்கிற சிவில் செயற்பாட்டாளரே இவ்வாறு டுபாய் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானத்தின் உள்ளே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். “எனக்கு எதிராகப் பயணத்தடை இருக்குமாக இருந்தால் விமானத்துக்குள் வருவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் வைத்து தன்னை கைது செய்திருக்கலாமே, கைது செய்வதற்கான ஆவணங்கள் இருந்தால் அதிகாரிகள் அதனைக் காண்பிக்க வேண்டும்.” எனவும் தான் கைது செய்யப்படும்போது அதிகாரிகளிடம் டனிஸ் அலி கோருவதையும் காணமுடிகிறது.

இதற்கு எதற்கும் பதிலளிக்காத அதிகாரிகள் விமானத்தின் உள்ளே ஆசனத்தில் அமர்ந்திருந்த டனிஸ் அலியை கைது செய்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை...

ஆசிரிய ஆலோசகர் சேவை சம்பள முரண்பாடு – சட்டமா அதிபரின் அறிவிப்பு

இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட...

அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்ப்பு

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வலுசக்தி சுயாதிகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், புதிய மின்சார...