நாட்டு மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்ப முடிந்திருந்தாலும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலையானது முன்னைய நிலையை விட மோசமானது என்று எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தேசிய சபை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
சிவில் அமைப்புகள், வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தேசிய சபைக்கு கொண்டு வரப்படும் முற்போக்கான முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.