முறைப்பாடு ஒன்றினை விசாரிக்கசென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
நேற்று பிடிகல, தலகஸ்பே மஹேன பகுதிக்கு முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குறித்த சந்தேகநபர் தாக்கி காயப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிடிகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர். இதன்போது சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபருக்கு எதிராக 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்தமை ஆகிய குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.