follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துங்கள்! - ஜனாதிபதி

எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துங்கள்! – ஜனாதிபதி

Published on

நாடு பூராகவும் எரிபொருள் விநியோகத்தை துரிதமாகவும், சரியாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோன்று பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்களுக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடற்றொழில், சுற்றுலாத்துறை, உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும், பொது போக்குவரத்து சேவைகளுக்காகவும் வழமைபோன்று போக்குவரத்து டிப்போக்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களில் எரிபொருளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட...

வடக்கு ரயில் சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...