follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுகொழும்பிற்கு மரக்கறிகளை கொண்டுவர விசேட வேலைத்திட்டம்

கொழும்பிற்கு மரக்கறிகளை கொண்டுவர விசேட வேலைத்திட்டம்

Published on

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நாட்களில் நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வௌி மாவட்டங்களில் இருந்து கொழும்பு மாவட்டத்திற்கு மரக்கறிகளை கொண்டு வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தினுள் அமைந்துள்ள நாரஹேன்பிட, போகுந்தர மற்றும் மீகொட ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்காக திறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மத்திய நிலையங்களுக்கு வௌி மாகாணங்களில் இருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு விவசாயிகள் மற்றும் மற்றைய வர்த்தகர்களுக்கான வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக மீகொட பொருளாதார மத்திய நிலையத்தை கேந்திரமாக கொண்டு தம்புள்ளை, நுவரெலியா மற்றும் தம்புத்தேகம ஆகிய விவசாயிகளின் உற்பத்திகளை கொழும்பு, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விநியோகிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...