follow the truth

follow the truth

September, 11, 2024
Homeஉள்நாடுசெங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள் கையொப்பம்

செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள் கையொப்பம்

Published on

நாட்டில் சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்கான செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

கண்டியில் இந்த பிரகடனம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி 2022 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதைப் போன்று, நிபந்தனையின்றி அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களும் சர்வதேசமும் அங்கீகரிக்கும் தலைவர் ஒருவர் அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வகட்சி அரசாங்கமொன்று குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் எனவும், 19 ஆம் திருத்தத்திற்கு அப்பாற்சென்று 22 ஆம் திருத்தத்தை மிக விரைவில் கொண்டு வரவேண்டும் எனவும் செங்கடகல பிரகடனத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறும் வரை பதவியில் இருப்பார் எனவும் அதற்கான காலவரையறை குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதித் தேர்தல் – இலங்கை முஸ்லிம்களிடம் ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள வேண்டுகோள்

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற்கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில...

பல ரயில் பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கம்

12 ரயில் பெட்டிகளின் மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், அவை சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர்...

ஹிருணிகாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம்...