follow the truth

follow the truth

September, 8, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு

சீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு

Published on

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து  பக்கெட்  200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சீமெந்து  பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.

ஒரு வருட காலத்திற்கு முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து  பக்கெட் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து பக்கட்டின்   விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் ஆகியன காரணமாக சீமெந்து  பக்கெட்டுக்களை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதில் பாரிய அசெளகரியங்களையும், போக்குவரத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக சிமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

சீமெந்து விலையேற்றம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் நிர்மாணத் துறையில் ஈடுபடுவோரும் தமது தொழிற்துறையில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...

சுகாதாரத் துறையை புத்தாக்கப்படுத்த வேண்டும்

அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட குடிமக்களுக்கு காணப்பட வேண்டிய ஏனைய பொருளாதார சமூக...