follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுநாட்டை கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும்! - ரணில்

நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும்! – ரணில்

Published on

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை அரசியல் தலைவர்களும், மக்களும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தி, இன்னும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டால் மாத்திரமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும், உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது என குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை அடைந்ததும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை அரசியல் தலைவர்களும் மக்களும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை [நேரலை]

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா வழங்கும்...

புதிய ஆளுநர்கள் நியமனம்

புதிய ஆளுநர்கள் இன்று (25) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள்...