follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்சீனா வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை நிராகரித்த வட கொரியா

சீனா வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை நிராகரித்த வட கொரியா

Published on

சீனா நன்கொடையாக வழங்கிய சுமார் 30 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் நிலவிவரும் தடுப்பூசிக்கான பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் (COVAX ) திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் (Sinovac ) தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதல் முறையல்ல எனவும் பக்கவிளைவு ஏற்படும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டி கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 20 லட்சம் டோஸ் ஆஸ்ட்ரோஜெனீகா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 19-ஆம் திகதி வரை வட கொரியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவரும் பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...