follow the truth

follow the truth

July, 9, 2024
Homeஉள்நாடுஇன்று குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறப்பு

இன்று குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறப்பு

Published on

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்றைய தினம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமது பிரதான மற்றும் பிராந்திய அலுவலகங்கள் இன்றைய தினம் திறந்திருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளியுறவு அமைச்சின் தூதரக அலுவலகங்கள் இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை 7.30 முதல் 4.30 வரை கொன்சியூலர் அலுவலகங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளே இன்று வழங்கப்படும் என வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், வெளியுறவு அமைச்சின் தூதரக அலுவலகங்கள் நாளைய தினம் மூடப்பட்டிருக்குமென்பதுடன், நாளை மறுதினம் முதல் வழமை போன்று செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொம்பனித்தெரு மேம்பாலம் அடுத்த வாரம் மக்கள் பாவனைக்கு

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையை இணைக்கும் புகையிரதப் பாதைக்கு மேலே நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தின் இரண்டாம்...

அதுருகிரிய துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (08) மாலை 119...

மின் கட்டணம் 30% குறைக்க தீர்மானம்

மின்சார கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது எதிர்வரும்...