follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுமுகக்கவசம் இனி அவசியமில்லை! - அரசாங்கம் : அவசியம் என்கிறது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

முகக்கவசம் இனி அவசியமில்லை! – அரசாங்கம் : அவசியம் என்கிறது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Published on

முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படமாட்டோம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துதெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில் வரப்படவில்லை. இன்றும் பல்வேறு நாடுகளில் மீண்டும் வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந் நிலையில்
கொரோனா தொற்றை ஒழிக்காமல், இதுபோன்ற தீர்மானங்களை எடுக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

பொதுத் தேர்தலுக்கான மதிப்பீட்டுத் தொகை திறைசேரிக்கு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு...

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல்...