follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுP.B.ஜயசுந்தர, கப்ரால் உள்ளிட்ட பலருக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு

P.B.ஜயசுந்தர, கப்ரால் உள்ளிட்ட பலருக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு

Published on

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர், கலாநிதி பி.பி. ஜயசுந்தர மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இன்று(08) பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் தொடர்பில் அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமையவே இந்த அழைப்பை விடுத்துள்ளதாக அதன் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம், இன்று(08) பிற்பகல் 2 மணிக்கு அரசாங்கக் கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவில் முன்னிலையாக குறித்த தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அதனைத்தவிர அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட பலரும் இன்று(08) அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம்

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல்...

பேர ஏரியில் விலங்குகள் இறப்பதற்கான காரணம் பாக்டீரியா தொற்று

கொழும்பில் உள்ள பேர ஏரியில் விலங்குகள் இறப்பதற்கான காரணம் பாக்டீரியா தொற்று என்று ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர...