follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஇனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளது.

இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளது.

Published on

இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இரு போகங்களிலும் மேற்கொள்ளப்படும் விவசாயத்திற்கு போதுமான உரம் காணப்படவில்லை எனவும் இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பெரும்போகத்திற்கான உரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு உரம் கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி மாதம் வரை சமாளிக்கக்கூடியதாகவிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்றாலும் சுயமாக இலங்கையினால் இந்த ஆண்டை முழுமையாகக் கடக்க முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...

முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற...

மின் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த...