follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1ஜனாதிபதி - ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி – ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

21ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 21ஆம் திருத்தச் சட்டமூல வரைவை முன்னிலைப்படுத்தி ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சட்டமூல வரைவில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை மற்றும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவதை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு முறுகல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான பின்னணியில் கடந்த 26ஆம் திகதி கட்சி தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...