follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP1ஜனாதிபதி - ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி – ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

21ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 21ஆம் திருத்தச் சட்டமூல வரைவை முன்னிலைப்படுத்தி ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சட்டமூல வரைவில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை மற்றும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவதை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு முறுகல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான பின்னணியில் கடந்த 26ஆம் திகதி கட்சி தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும்...

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர்...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...