follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகையிருப்பில் உள்ள மதுபானங்களின் அளவு குறித்து அறிக்கை கோரல்

கையிருப்பில் உள்ள மதுபானங்களின் அளவு குறித்து அறிக்கை கோரல்

Published on

மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரையில் கையிருப்பில் உள்ள மதுபானங்களின் அளவு குறித்து, அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில மதுபான வகைகளுக்கான இலங்கையின் தரநிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில மதுபானங்களுக்கு, தரநிர்ணயம் செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தரநிர்ணயங்களுக்கு அமையவே, இலங்கையில் மதுபானங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதுடன், இறக்குமதி செய்யவும் முடியுமென இறக்குமதியாளர்களுக்கும், உள்ளூர் மதுபான உற்பத்தியாளர்களுக்கும் கடந்தவாரம் எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், அந்த தரநிர்ணயங்களுக்கு அமையவே, இனிமேல் சந்தைக்கு விநியோகிக்க அனுமதிக்கப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இந்திய வர்த்தகர் கைது

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர்...

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...