கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 300 கொள்கலன்கள் உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்தக் கொள்கலன்களை விடுவிக்க அரசாங்கம் இதுவரையில் மாற்று வழியை முன்வைக்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் ஜி.இளமைநாதன் தெரிவித்துள்ளார்.