” கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 49 நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. நாளையதினம் 28 ஆம் திகதி போராட்டம் ஆரம்பமாகி 50 நாட்கள் நிறைவுபெறுகின்றது.
இந்நிலையில் நாளையதினம் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,உத்தியோகபூர்வ கிராம சேவையாளர் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் கொட்டும் மழை, வெயில் என்று பாராது இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.