follow the truth

follow the truth

September, 8, 2024
HomeUncategorizedகல்வித்துறையில் பல குறைபாடுகள் கண்டறிவு – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

கல்வித்துறையில் பல குறைபாடுகள் கண்டறிவு – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

Published on

கல்வித்துறையில் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுகளை தாம் கண்டறிந்துள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், மேலும் சில பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், மார்கழி மாதத்திற்குள் நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என தெரிவித்தார்.

பாடத்திட்டங்களை உரிய நேரத்தில் முடித்தல், பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துதல், பெறுபேறுகளை தாமதமின்றி வெளியிடுதல், பாடப்புத்தகங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தாள் தட்டுப்பாடு காரணமாக பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச உத்தியோகத்தர்கள் முதுகு நிமிர்ந்து தமது பணிகளைச் செய்வதற்கான பின்னணி உருவாக்கப்படும் – ஜனக ரத்நாயக்க

அரச உத்தியோகத்தர் முதுகெலும்புடன் நிமிர்ந்து வேலை செய்ய வேண்டுமாயின் அதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஐக்கிய லங்கா...

குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கேள்வி கேட்கக் கூடாது

குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து கேள்வி கேட்கக் கூடாது என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில்...

ரவூப் ஹகீமின் இலக்ஷன் ஆர்டர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி...