follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசிறுபோக நெற்செய்கை விவசாயிகளுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை

சிறுபோக நெற்செய்கை விவசாயிகளுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை

Published on

சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அவசியமான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுபோக நெல் செய்கைக்கான எரிபொருள் இன்மையால், விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சிறுபோகத்திற்கு அவசியமான எரிபொருளை விரைவில் விநியோகிக்கும் திட்டத்தை உடனடியாக தயாரிப்பதற்காக, விவசாய அமைச்சில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, விவசாய பணிப்பாளர் நாயகத்தினால், 25 மாவட்டங்களையும் உள்ளீர்க்கும் வகையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக, தெரிவுசெய்யப்பட்ட 217 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பெயர்ப்பட்டியல் விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக, விவசாயிகளுக்கு அவசியமான எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, சிறுபோகத்திற்கு அவசியமான எரிபொருளை வழங்க வலுசக்தி அமைச்சர் இணங்கியதாக, விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, விவசாயிகள் தங்களது எரிபொருள் தேவை குறித்து, கமநலசேவை திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்ட கடிதத்தை முன்வைப்பதன் மூலம், அனுமதிபெற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவசியமான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...