follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉலகம்காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

Published on

காபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். கே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 180 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்கா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியபின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ஜோ பைடன், காபூல் விமான நிலையத்தில் நிலைமை தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இராணுவத் தளபதிகளிடம் விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும்போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவே இறுதித் தாக்குதல் அல்ல என்று குறிப்பிட்ட ஜோ பைடன், அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கோ, அமெரிக்க வீரர்களுக்கோ யாராவது தீங்கு விளைவிக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறிய அவர், இதில் ஒருபோதும் சந்தேகத்திற்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி விதித்த சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீன பொருட்களிற்கு டிரம்ப்...

அமெரிக்காவின் அடிமடியிலேயே கை வைத்த சீனா

சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது. இதனால்...

கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட்...