follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுபிரதமரால் நியமிக்கப்பட்ட 4 விசேட குழுக்களின் அறிக்கை தயார்

பிரதமரால் நியமிக்கப்பட்ட 4 விசேட குழுக்களின் அறிக்கை தயார்

Published on

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரங்கள் மற்றும் பெற்றோலிய வளம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

அதன் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார கையொப்பமிட்ட அறிக்கையில், பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, நியமிக்கப்பட்டுள்ள குழுக்களுடன் ஆலோசிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் கூட்டமொன்றைக் கூட்டி ஏற்கனவே அதற்கான அறிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விரிவான செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் சாதகத்தன்மையை மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...