follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுவன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை

வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை

Published on

வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், ஜனநாயக ரீதியில் போராட்டம் வெற்றிபெற இளைஞர்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “இவர்கள் அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், இலங்கையர்கள், அதாவது, எங்கள் மக்கள், எனவே அவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.

எத்தகைய அரசியல் கருத்துக்களைக்கொண்டிருந்த போதிலும் எத்தகைய அரசியல் கட்சியை சார்ந்திருந்த போதிலும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.எனவே இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அன்பானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில் வன்முறையிலான செயற்பாட்டை நிறுத்துங்கள்.

இல்லையெனில் நம் நாட்டில் உள்ள சக குடிமக்களில் ஒரு பகுதியைக் கொன்று, நசுக்கி, எரித்து, அழித்துவிடலாம். இவ்வாறு எம்மிடமிருந்து சட்டத்தை நீங்கள் கையில் எடுத்தால் எமது நாட்டுக்கு எதிர்காலம் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர்...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...

ஜனவரியில் நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்

வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...