follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

Published on

பல்வேறு அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்றுள்ளாக ​தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கை பொது நிர்வாக உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்  முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று  பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அதிபர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...