நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பயணிகள் தங்களுடைய விமான சீட்டுகள் மற்றும் கடவுச்சீட்டினை விமான நிலைய சோதனைச் சாவடிகளில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களிடம் வழங்கலாம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அத்துடன், விமானம் புறப்படும் நேரத்திற்கு 03 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.