follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடு2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்யலாம்

2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்யலாம்

Published on

2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொடுப்பனவு கிடைக்காத அல்லது கொடுப்பனவிற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையீட்டை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...