follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபுதிய பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் கலந்துரையாடல்!

புதிய பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் கலந்துரையாடல்!

Published on

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான கலந்துரையாடலுக்காக பாராளுமன்ற  செயற்குழு கூட்டம்  இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற  கட்டிடத்தொகுதியில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியாம்பலா பிட்டிய விலகுவதாக தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் பிரதி சபாநாயகர்  ரஞ்சித் சியாம்பலா பிட்டிய இராஜினாமா தொடர்பான அறிவிப்பை விடுப்பதுடன், விசேட உரை ஒன்றினையும் ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் முன்மொழியப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

EPF பதிவு செய்ய புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழியரொருவர் சேவையில்...

அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

2025 உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்...

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும்...