follow the truth

follow the truth

February, 3, 2025
Homeஉள்நாடுபோலி விசாக்கள் மூலம் இத்தாலி செல்ல முயன்ற ஐவர் கைது

போலி விசாக்கள் மூலம் இத்தாலி செல்ல முயன்ற ஐவர் கைது

Published on

போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில பகுதியை சேர்ந்த குறித்த ஐவரினதும் விசாக்கள் மீது எழுந்த சந்​தேகம் காரணமாக முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவை போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் தாம் இத்தாலிக்கு செல்ல திட்டமிட்டதாக குறித்த ஐவரும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் உள்ள தரகர்கள் ஊடாக போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த ஐவரும் விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு

கொழும்புத் துறைமுகத்தில் I கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நாட்டில் பிரபலமான பிரச்சினை எழுந்தது. தினமும் அண்ணளவாக...

உப்பு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி

உப்பு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் உப்பு பற்றாக்குறைக்கு...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக...