follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகட்டுநாயக்க விமான நிலையத்தில் டிஜிட்டல் நுழைவாயில் அணுகல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் டிஜிட்டல் நுழைவாயில் அணுகல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Published on

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடைமேடை ஒன்றில் இருந்து புறப்படும் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயில்/அணுகல் முறை தொடர்பான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து  நிறுவனம் விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் பல பல நீட்டிப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நடைமேடை ஒன்றின் குறுக்கே புறப்படும் பயணிகளுக்கு டிஜிட்டல் கேட்வே/அணுகல் முறைி அறிமுகம் செய்வதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த முன்னோடித் திட்டம் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் ‘ஒரு அடையாளம்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதன்மூலம், ஓய்வறை இடத்தில் மின்னணு கதவுகள் மூலம் முகத்தை அடையாளம் காணும் இயந்திரங்களை நிறுவுவதால், பயணிகளை அடையாளம் காண செல்லுபடியாகும் டிஜிட்டல் கடவுச்சீட்டு வைத்திருப்பதை உறுதிசெய்வதன் மூலம், பயணிகளை பரிசோதிக்கும் முறை எளிதான செயலாக இருக்கும்.

சுற்றுலாத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இது தொடர்பான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...