follow the truth

follow the truth

March, 13, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்றில் தொலைபேசி பாவனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டுப்பாடுகள்

நாடாளுமன்றில் தொலைபேசி பாவனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டுப்பாடுகள்

Published on

நிலவும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தின் தொலைபேசி பாவனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாடாளுமன்ற தொலைபேசிகளில் பிரத்தியேக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என சகல பிரிவு பிரதானிகள் ஊடாக அனைத்து சேவையாளர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றில் மின்சாரம், நீர் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்றில் நாளாந்த உணவில் சேர்த்து கொள்ளப்படும் உணவு வகைககளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதுதவிர, நாடாளுமன்றில் உணவுப் பொதிக்காக அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம்

கேட்கும் திறன் குறைபாடு பார்வை குறைபாடு போன்ற விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காகவும் பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான வாய்ப்பை...

இயலாமையுடைய நபர்கள் ஒன்றியத்தின் தலைவராக சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா...

நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு JICA மற்றும் JFTC ஆதரவு

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை...