follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுநாடாளுமன்றில் தொலைபேசி பாவனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டுப்பாடுகள்

நாடாளுமன்றில் தொலைபேசி பாவனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டுப்பாடுகள்

Published on

நிலவும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தின் தொலைபேசி பாவனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாடாளுமன்ற தொலைபேசிகளில் பிரத்தியேக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என சகல பிரிவு பிரதானிகள் ஊடாக அனைத்து சேவையாளர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றில் மின்சாரம், நீர் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்றில் நாளாந்த உணவில் சேர்த்து கொள்ளப்படும் உணவு வகைககளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதுதவிர, நாடாளுமன்றில் உணவுப் பொதிக்காக அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...