follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமருந்து தட்டுப்பாடு : அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம்  முன்னெடுக்க தீர்மானம்

மருந்து தட்டுப்பாடு : அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம்  முன்னெடுக்க தீர்மானம்

Published on

நாடுபூராகவும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு காணப்படுவதால், அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம்  முன்னெடுக்க  தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நாடுபூராகவுமுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடு காணப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவை ஒழுங்குப்படுத்தும் சபைக்கு அறிவித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

எனவே நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துச் செல்லும் மருந்துகளுக்கான பற்றாக்குறை காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே மருந்துகளையம் வைத்திய உபகரணங்களையும் இலங்கைக்க நன்கொடையாக வழங்குமாறு வெளிநாடுகளிலுள்ள இலங்கையரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...