follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுஇலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை

இலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை

Published on

கொழும்பு நகரை அண்மித்து முன்னெடுக்கப்படும் மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் போக்குவரத்துகளில் சிக்கல் ஏற்படலாம் என்றும் பல இடங்களில் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே ,இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு பேரணி மற்றும் கூட்டங்கள் நடைபெறும் பிரதேசங்களுக்கான சுற்றுலாப் பயணங்களை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரீட்சார்த்திகளுக்காக நாளை ஆட்பதிவு திணைக்களம் திறப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம்...

படலந்த ஆணைக்குழு அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து...

பாடசாலை அபிவிருத்தி சங்கக் கட்டணம் தொடர்பில் குற்றச்சாட்டு

பாடசாலை அபிவிருத்தி சங்கங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்...